கடைசி டி-20: அசத்துமா இந்தியா, அதிர்ச்சியளிக்குமா பங்களாதேஷ்?

கடைசி டி-20: அசத்துமா இந்தியா, அதிர்ச்சியளிக்குமா பங்களாதேஷ்?
கடைசி டி-20: அசத்துமா இந்தியா, அதிர்ச்சியளிக்குமா பங்களாதேஷ்?

இந்தியா - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி நாக்பூரில் இன்று நடைபெறுகிறது. 

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி-20 போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. டெல்லியில் நடந்த முதல் டி-20 போட்டியில், வெற்றி பெற்று இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தது பங்களாதேஷ். ராஜ்கோட்டில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ரோகித் சர்மாவின் அதிரடியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் மூன்றாவது டி-20 போட்டி, நாக்பூரில் இன்று நடக்கிறது.

கடந்த போட்டியின் போது விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் செய்த சில தவறுகள் விமர்சிக்கப்பட்டன. அதனால் இந்தப் போட்டியில் அந்த தவறுகளை தொடரமாட்டார் என்று நம்பலாம். கலீல் அகமது இரண்டு போட்டிகளிலும் ரன்களை வாரி வழங்கியதால் இந்தப் போட்டியில் அவர் மாற்றப்படலாம். ஷிகர் தவானின் பேட்டிங்கும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இருந்தாலும் இந்திய அணி ஸ்ரேயாஸ், கே.எல்.ராகுல் ஆகியோருடன் வலுவான அணியாகவே இருக்கிறது. பந்துவீச்சில் சாஹல், வாஷிங்டன் சுந்தர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 

பங்களாதேஷ் அணி, விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம், சவும்யா சர்கார், கேப்டன் மகமதுல்லா ஆகியோரையே அதிகம் நம்பியுள்ளது. அவர்களை விரைவில் ஆட்டமிழக்கச் செய்தால், எளிதாக வெற்றி பெற்று விடலாம். ஆனால், அந்த அணி, முதல் போட்டியில் இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தது போல, இந்தப் போட்டியிலும் அதிர்ச்சி அளிக்க காத்திருக்கிறது.

இந்த டி-20 தொடர், 1-1 என்ற சமநிலையில் இருப்பதால், தொடரை வெல்வதற்காக இரு அணிகளும் கடும் முனைப்புக் காட்டும். இதனால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com