நாளை தொடங்குகிறது இந்தியா-பங்களாதேஷ் முதல் டெஸ்ட் போட்டி

நாளை தொடங்குகிறது இந்தியா-பங்களாதேஷ் முதல் டெஸ்ட் போட்டி

நாளை தொடங்குகிறது இந்தியா-பங்களாதேஷ் முதல் டெஸ்ட் போட்டி
Published on

இந்தியா-பங்களாதேஷ் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இந்தூரில் நாளை தொடங்குகிறது.

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்களாதேஷ் பங்கேற்கிறது. இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி, இந்தூரில் நாளை காலை 9.30 மணிக்குத் தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

சொந்த மண்ணில் தொடர்ந்து 11 டெஸ்ட் தொடர்களை வென்றுள்ள இந்திய அணி, பங்களாதேஷ் அணியையும் வீழ்த்தி சாதனையைத் தொடரும் முனைப்பில் உள்ளது. கேப்டன் கோலி, ரோகித் ஷர்மா, ரஹானே, புஜாரா என இந்திய அணியின் பேட்டிங் வரிசை வலுவாக உள்ளது. பந்துவீச்சில் முகமது ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோருடன், அனுபவ சுழற்பந்து வீச்சாளர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் களமிறங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் வெற்றியுடன் தொடரைக் துவக்கும் நோக்கில் உள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com