இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நாளை முதல் ஒருநாள் போட்டி !

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நாளை முதல் ஒருநாள் போட்டி !

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நாளை முதல் ஒருநாள் போட்டி !
Published on

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை சிட்னியில் பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது.

ஐபிஎல் தொடரை முடித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள், ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் செய்து 3 ஒருநாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளனர். அதற்காக அவர்கள் ஆஸ்திரேலியா சென்றுள்ளனர். இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நாளை சிட்னியில் நடக்கிறது. இந்தப் போட்டி நாளை இந்திய நேரப்படி காலை 9.10 மணிக்கு தொடங்குகிறது.

இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரப் பயிற்சியில் உள்ளனர். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் மேற்கொண்ட கடந்த சுற்றுப்பயணத்தில் அதிரடி வெற்றிகள் பெற்று தொடரைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது. ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் 2019-20-ஆம் ஆண்டு மேற்கொண்ட சுற்றுப்பயணத்தில் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றன. இத்தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

ஆஸ்திரேலிய அணி 2018-19 -ஆம் ஆண்டு மேற்கொண்ட இந்திய சுற்றுப்பயணத்தில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது. இத்தொடரை ஆஸ்திரேலிய அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையே கடைசியாக நடைபெற்ற 5 தொடர்களில், இந்திய அணி 3 முறையும் ஆஸ்திரேலிய அணி 2 முறையும் வென்றுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com