மயங்க் அகர்வால் அரைசதம்; இந்திய அணி நிதான ஆட்டம்..!

மயங்க் அகர்வால் அரைசதம்; இந்திய அணி நிதான ஆட்டம்..!
மயங்க் அகர்வால் அரைசதம்; இந்திய அணி நிதான ஆட்டம்..!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின், இரண்டாவது இன்னிங்ஸில் மயங்க் அகர்வால் அரைசதம் கடந்தார்.

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 165 ரன்களுக்குச் சுருண்டது. இந்திய அணி தரப்பில் அதிகப்பட்சமாக துணைக் கேப்டன் ரஹானே 46 ரன்கள் சேர்த்தார். இதனையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணி, மூன்றாம் நாளான இன்று 348 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் நியூசிலாந்து அணி 183 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய அணியில் இசாந்த் ஷர்மா 3 விக்கெட்களும், அஷ்வின் 3 விக்கெட்களும் வீழ்த்தினர்.

இதனையடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை இந்திய அணி விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக பிருத்தி ஷா மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர். ஆனால் பிருத்தி ஷா வெறும் 14 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அதேசமயம் நிதானமாக ஆடி வரும் மயங்க் அகர்வால் அரை சதத்தை கடந்துள்ளார்.

தற்போதைய நிலவரப்படி இந்தியா 30.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் சேர்த்துள்ளது. மயங்க் அகர்வால் 52 ரன்களுடனும், புஜாரா 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com