இன்று 2-வது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணியில் அதிரடி மாற்றம்!

இன்று 2-வது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணியில் அதிரடி மாற்றம்!

இன்று 2-வது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணியில் அதிரடி மாற்றம்!
Published on

தென்னாப்பிரிக்க அணியுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, செஞ்சுரியனில் இன்று பிற்பகல் தொடங்குகிறது. இதற்காக இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்யப்பட இருக்கிறது. 

இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பரிதாபமாக தோற்றது. வெற்றிபெற வேண்டிய வாய்ப்பை எளிதில் இந்திய அணி இழந்தது. இந்தப் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் புவனேஷ்வர்குமார், பும்ரா, ஷமி சிறப்பாக செயல்பட்டனர். ஹர்திக் பாண்ட்யா ஆல்ரவுண்டராக ஜொலித்தார். இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி, செஞ்சுரியனில் இன்று நடக்கிறது.

 வெளிநாட்டில் சிறப்பாக விளையாடும் ரஹானே முதல் டெஸ்ட் போட்டியில் சேர்க்கப்படாதது கடும் விமர்சனத்துக்குள்ளானது. இன்றைய போட்டியில் அவர் சேர்க்கப்படுவார் என்று கூறப்படுகிறது. தொடக்க ஆட்டக்காரராக தவானுக்குப் பதில் கே.எல்.ராகுல் களமிறங்குகிறார். வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவும் களமிறக்கப்படுகிறார். விக்கெட் கீப்பர் சஹா காயம் அடைந்துள்ளதாகவும் அவருக்குப் பதில் பார்த்திவ் படேல் இன்றைய போட்டியில் சேர்க்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது. முதல் போட்டியில் கண்ட தோல்வி காரணமாக, இந்த மாற்றங்களை இந்திய அணி செய்துள்ளது.

முதல் போட்டியில் கண்ட தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு இந்தப் போட்டியில் இந்திய அணி, சிறப்பாக விளையாடும் என்று தெரிகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com