தென் ஆப்பிரிக்காவை இன்றாவது வீழ்த்துமா இந்தியா? என்ன செய்யப்போகிறார் ரிஷப் பண்ட்?

தென் ஆப்பிரிக்காவை இன்றாவது வீழ்த்துமா இந்தியா? என்ன செய்யப்போகிறார் ரிஷப் பண்ட்?
தென் ஆப்பிரிக்காவை இன்றாவது வீழ்த்துமா இந்தியா? என்ன செய்யப்போகிறார் ரிஷப் பண்ட்?

இந்தியா தென்னாப்ரிக்கா இடையேயான 3வது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறுகிறது.

5போட்டிகள் கொண்ட தொடரில் ஏற்கனவே இரு போட்டிகளில் வென்றுள்ள தென்னாப்ரிக்கா, இன்றைய போட்டியிலும் வென்று தொடரை
வெல்ல தீவிரம் காட்டுகிறது. அதேநேரத்தில், முதல் வெற்றியை பதிவு செய்ய இந்திய அணியும் முயற்சித்து வருகிறது. முதல் போட்டியில் 200
ரன்களுக்கு மேல் குவித்த நிலையிலும், மோசமான பந்துவீச்சால் இந்தியா தோல்வியடைந்தது.

2-வது போட்டியில் பேஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டத்தால் 148 ரன்கள் மட்டுமே எடுத்து தென் ஆப்ரிக்கா அதிரடியில் வீழ்ந்தது. ரோகித் சர்மா,
விராட் கோலி, கே.எல்.ராகுல், பும்ரா உள்ளிட்ட பிரதான வீரர்கள் இல்லாத நிலையில், இளம் வீரர்கள் இந்தியாவை வெற்றிப்பாதைக்கு திருப்புவார்களாக என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அதனால் இந்திய அணியில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படவாம் என தெரிகிறது. இந்தப் போட்டியில் தீபக் ஹூடா இடம்பெற வாய்ப்பிருக்கிறது. அதேபேல பந்துவீச்சாளர்களில் உம்ரான் மாலிக் அல்லது அர்ஷ்தீப் சிங் இடம் பெறலாம். இன்றையப் போட்டியில் சஹால் மற்றும் அவேஷ் கான் அணியில் இருந்து கழட்டிவிடப்படலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com