9 ரன்னில் 5 விக்கெட் காலி! தென்னாப்ரிக்கா வீரர்களை தெறிக்கவிட்ட சாஹர், அர்ஸ்தீப் சிங்!

9 ரன்னில் 5 விக்கெட் காலி! தென்னாப்ரிக்கா வீரர்களை தெறிக்கவிட்ட சாஹர், அர்ஸ்தீப் சிங்!
9 ரன்னில் 5 விக்கெட் காலி! தென்னாப்ரிக்கா வீரர்களை தெறிக்கவிட்ட சாஹர், அர்ஸ்தீப் சிங்!

இந்தியா-தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில், இந்தியாவின் அதிரடியான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் தென்னாப்பிரிக்கா அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்துடன் ஆடி வருகிறது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி மூன்று ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்நிலையில் தொடரின் முதல்போட்டி இன்று திருவனந்தபுரத்தில் 7 மணிக்கு தொடங்கி தற்போது நடைபெற்றுவருகிறது.

டாஸ் வென்று இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பவுலிங்கை தேர்வு செய்தார். பின்னர் பேட்டிங் செய்ய களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு முதல் இரண்டு ஓவர்களிலேயே அதிர்ச்சி கொடுக்க காத்திருந்தனர் இந்திய பந்துவீச்சாளர்கள் தீபக் சாஹர் மற்றும் அர்ஸ்தீப் சிங்.

முதல் ஓவரை வீசிய தீபக் சாஹர், அந்த ஓவரின் கடைசி பந்தில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமாவை போல்ட் ஆகி 0 ரன்னுக்கு பெவிலியன் திருப்பினார். அடுத்து பந்துவீச வந்த அர்ஸ்தீப் சிங் இரண்டாவது ஓவரின் இரண்டாவது பந்தில் அதிரடி வீரர் டிகாக்கை போல்ட் ஆக்கி 1 ரன்னிற்கு வெளியேற்றினார்.

பின்னர் ரிலீ, டேவிட் மில்லர் மற்றும் ட்ரிஸ்டன் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்து தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களை நிலைகுலையச் செய்தனர். 9 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது தென்னாப்பிரிக்க அணி. பின்னர் விக்கெட் வீழ்ச்சியை தடுக்கும் பொருட்டு தென்னாப்ரிக்க வீரர்கள் நிதானமாக விளையாடினர். இருப்பினும் 46 ரன்கள் எடுத்திருந்த போது அந்த அணி தனது ஆறாவது விக்கெட்டை பறிகொடுத்தது. ஹர்ஷல் படேல் இந்த விக்கெட்டை வீழ்த்தினார். தென்னாப்ரிக்க அணி 11.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் 4 வீரர்கள் டக் அவுட் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com