உலகக் கோப்பை: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா

உலகக் கோப்பை: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா

உலகக் கோப்பை: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா
Published on

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 2-வது வெற்றியை பதிவு செய்தது.

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்கள் தவான் மற்றும் ரோகித் சர்மா சிறப்பான அடித்தளம் அமைத்து, முதல் விக்கெட்டுக்கு 127 ரன்கள் சேர்த்தனர். ரோஹித் சர்மா 57 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், மறுமுனையில் தவான் 117 ரன்கள் குவித்தார். இதன் மூலம், சரியாக விளையாடவில்லை என்ற தன்மீதான விமர்சனத்துக்கு தவான் முற்றுப்புள்ளி வைத்தார்.

இதையடுத்து வந்த கேப்டன் கோலி 77 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் உள்பட 82 ரன்கள் சேர்த்தார். 4-வது வீரராக இறங்கிய ஹர்திக் பாண்டியா 27 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 48 ரன்கள் விளாசினார். இறுதி ஓவர்களில் தோனி, ராகுல் ஆகியோர் அதிரடி காட்ட இந்தியா 50 ஓவர்களில் 352 ரன்கள் குவித்தது.

கடினமான இலக்கை நோக்கி விளையாடிய நிலையில், ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் அதிரடி தொடக்கம் தந்தார். எனினும் அவர் எதிர்பாரதவிதமாக 36 ரன்களில் ரன் அவுட் ஆனார். மற்றொரு முனையில், வழக்கமான அதிரடி ஆட்டத்தை கைவிட்ட வார்னர், பொறுமையாக விளையாடி அரை சதம் அடித்தார். பின்னர் வந்த ஸ்மித் 69 ரன்களும், கவாஜா 42 ரன்களும் எடுத்து பெவிலியன் திரும்பினர். 

கடைசியில் சற்று அதிரடி காட்டிய அலெக்ஸ் கேரி 35 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்தார். எனினும், ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 316 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 36 ரன்களில் வெற்றி பெற்று உலகக் கோப்பை தொடரில், 2-வது வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணியின் சார்பில் புவனேஸ்வர் குமார், பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். 117 ரன்கள் விளாசிய இந்திய தொடக்கவீரர் தவான் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com