முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இந்திய ஏ அணி சாம்பியன்

முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இந்திய ஏ அணி சாம்பியன்

முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இந்திய ஏ அணி சாம்பியன்
Published on

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இந்திய ஏ அணி சாம்பியன் பட்டம் வென்றது. தென்னாப்பிரிக்கா அணியுடனான இறுதியாட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கோப்பையை கைப்பற்றியது. 

பிரிட்டோரியாவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடி சதம் விளாசிய ஃபர்ஹான் பெஹர்தீன் 101 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷர்துல் தாகூர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். 268 ரன்கள் என்ற வெற்றி இலக்கை, இந்திய அணி 47-வது ஓவரில் எட்டியது. சிறப்பாக விளையாடி சதம் விளாசிய ஸ்ரோயஸ் ஐயர், 131 பந்துகளில் 140 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். விஜய் ஷங்கர் 72 ரன்களும், மணீஷ் பாண்டே ஆட்டமிழக்காமல் 32 ரன்களும் எடுத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com