இந்தியா - தென் ஆப்ரிக்கா இடையிலான டெஸ்ட் தொடர் நாளை தொடக்கம்

இந்தியா - தென் ஆப்ரிக்கா இடையிலான டெஸ்ட் தொடர் நாளை தொடக்கம்

இந்தியா - தென் ஆப்ரிக்கா இடையிலான டெஸ்ட் தொடர் நாளை தொடக்கம்

இந்தியா தென்னாப்ரிக்க அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் டெஸ்ட் தொடர் நாளை செஞ்சூரியனில் தொடங்குகிறது.

பாக்ஸிங் டே டெஸ்ட்டான முதல் போட்டி இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் கே.எல்.ராகுல், ரவிச்சந்திரன் அஸ்வின், புஜாரா ஆகிய நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா ஆகியோர் பந்து வீச்சில் சிறப்பாக செயல்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

டீன் எல்கர் தலைமையிலான தென்னாப்ரிக்க அணியில் பவுமா, மார்க்கரம், டிகாக், வேண்டர் டூசன் உள்ளிட்ட பேட்ஸ்மேன்களும், லுங்கி இங்கிடி, ரபடா, கேசவ் மஹாராஜ் உள்ளிட்ட பந்துவீச்சாளர்களும் இடம் பெற்றுள்ளனர்.

வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரிச் நார்கியா காயத்தால் விலகியது தென்னாப்ரிக்காவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. தென்னாப்ரிக்காவில் விளையாடிய கடைசி 20 போட்டிகளில் மூன்றில் மட்டுமே இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் தென்னாப்ரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com