பூரன், பொலார்ட் அதிரடி: வெஸ்ட் இண்டீஸ் 315 ரன்கள் குவிப்பு

பூரன், பொலார்ட் அதிரடி: வெஸ்ட் இண்டீஸ் 315 ரன்கள் குவிப்பு
பூரன், பொலார்ட் அதிரடி: வெஸ்ட் இண்டீஸ் 315 ரன்கள் குவிப்பு

இந்திய அணிக்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 315 ரன்கள் குவித்துள்ளது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி இன்று ஒடிஷாவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதல் பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர் எவின் லெவிஸ் 21 (50) ரன்களில் விக்கெட்டை இழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சாய் ஹோப் நிதானமாக ஆடி 42 (50) ரன்களில் அவுட் ஆனார்.

பின்னர் ஜோடி சேர்ந்த ரோஸ்டன் சேஸ் மற்றும் சிம்ரான் ஹெட்மெயர் நிலைத்து நின்று ஆடினர். ஹெட்மெயர் 37 (33) ரன்களில் வெளியேற, சேஸ் 38 (48) ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் ஜோடி சேர்ந்த பூரன் மற்றும் பொலார்ட், அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதிரடியாக விளையாடிய பூரன் 64 பந்துகளில் 89 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

விளாசிய பொலார்ட் அரை சதம் அடித்தார். இறுதிவரை விக்கெட்டை இழக்காத அவர், 51 பந்துகளில் 74 ரன்களை குவித்தார். 50 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 315 ரன்கள் குவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com