டி காக் அரை சதம்: இந்திய அணிக்கு 150 ரன்கள் இலக்கு  

டி காக் அரை சதம்: இந்திய அணிக்கு 150 ரன்கள் இலக்கு  

டி காக் அரை சதம்: இந்திய அணிக்கு 150 ரன்கள் இலக்கு  
Published on

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெற்றி பெற இந்திய அணிக்கு 150 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிக்களுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி மொஹாலியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டி காக் மற்றும் ரீசா ஹெண்ட்ரிக்ஸ் களமிறங்கினர். 

ஹெண்ட்ரிக்ஸ் வெறும் 6 ரன்களில் செய்னி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து வந்த பாவுமா, கேப்டன் டி காக் உடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் இரண்டாவது விக்கெட்டிற்கு 57 ரன்கள் சேர்த்தனர். அதிரடியாக விளையாடிய டி காக் 37 பந்துகளில் 8 பவுண்டரிகள் உதவியுடன் 52 ரன்கள் சேர்த்தார். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 15 ஓவர்களில் 110 ரன்கள் எடுத்தது. 

பாவுமா 43 பந்துகளில் 3பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் உதவியுடன் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பிறகு மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் எடுத்தனர். எனவே தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் தீபக் சாஹர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். செய்னி,ஜடேஜா,ஹர்திக் பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இந்திய அணி வெற்றிப் பெற 150 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி தற்போது வரை  2 ஓவர்களில் 21 ரன்கள் எடுத்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com