மீண்டும் திணறும் இந்திய அணி, ஒரு ரன்னில் தோனி ஏமாற்றம்!

மீண்டும் திணறும் இந்திய அணி, ஒரு ரன்னில் தோனி ஏமாற்றம்!

மீண்டும் திணறும் இந்திய அணி, ஒரு ரன்னில் தோனி ஏமாற்றம்!
Published on

நியூசிலாந்து அணியின் ஸ்விங் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய கிரிக்கெட் அணி திணறி வருகிறது. 16 ஓவரில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 40 எடுத்து விளையாடி வருகிறது. 

இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளும் 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இப்போது, 4 ஒருநாள் போட்டிகள் முடிவடைந்துள்ளன. முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி, தொடரை வென்றுவிட்டது.

நான்காவது ஒருநாள் போட்டியில் இந்தியா பரிதாபமாக தோல்வியடைந்தது. நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர்கள் போல்ட், கிராண்ட்ஹோம் ஆகியோரின் ஸ்விங்-கை சமாளிக்க முடியாமல், இந்திய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறி கொடுத்தனர். இதனால் இந்திய அணி, 19.1 ஓவர்களில் 92 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. பின்னர் 14.4 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் மோசமான பேட்டிங்காக இது அமைந்தது. இது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

இந்நிலையில் கடைசி ஒரு நாள் போட்டி வெலிங்டனில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ரோகித் சர்மாவும், தவானும் களமிறங்கினர். கடந்த போட்டியை போலவே, இன் றைய போட்டியிலும் பந்து நன்றாக ஸ்விங் ஆனது. டிரென்ட் போல்ட்டும் மேட் ஹென்றியும் மிரட்டினர். நான்காவது ஓவரில் ரோகித் சர்மாவை போல்டாக்கினார் ஹென்றி. அவர் 2 ரன்னில் வெளியேற, அடுத்து தவானைத் தூக்கினார் போல்ட். அவர் 6 ரன்கள் எடுத்த நிலையில் நடையை கட்டினார். அடுத்து சுப்மான் கில்லும் ராயுடுவும் பொறுமையாக ஆட முயன்றனர்.

சுப்மான் கில் 7 ரன் எடுத்திருந்தபோது, ஹென்றி பந்துவீச்சில் சட்னரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால் இந்திய அணி, 7 ஓவர்களில் 17 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழந்து தடுமாறிக்கொண்டிருந்தது. இதையடுத்து, கடந்த 2 போட்டிகளில் விளையாடாத அனுபவ வீரர் தோனி, ராயுடுவுடன் இணைந்தார். நின்று காப்பாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தோனி ஒரு ரன்னில் நடையை கட்ட, இந்திய அணி, மீண்டும் திணறத் தொடங்கியது. அடுத்து தமிழக வீரர் விஜய சஙக்ர் வந்தார். ராயுடுவும் அவரும் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

டிரிங்ஸ் இடைவேளையின் போது, அதாவது 16 ஓவர் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 40 ரன் எடுத்து ஆடி வருகிறது. ராயுடு 24 பந்துகளை சந்தித்து 3 ரன்னும் 26 பந்துகளை சந்தித்த விஜய் சங்கர் 12 ரன்னும் எடுத்து ஆடி வருகின் றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com