"மருத்துவர்கள் அழைக்கும் முன்புகூட கிரிக்கெட் பார்த்துக்கொண்டு இருந்தேன்"-விராட் கோலி!

"மருத்துவர்கள் அழைக்கும் முன்புகூட கிரிக்கெட் பார்த்துக்கொண்டு இருந்தேன்"-விராட் கோலி!

"மருத்துவர்கள் அழைக்கும் முன்புகூட கிரிக்கெட் பார்த்துக்கொண்டு இருந்தேன்"-விராட் கோலி!

பிரசவத்திற்கு முன்பாக டாக்டர் என்னை அறைக்குள் அழைப்பதற்கு முன்பு மொபைலில் ஷர்துல் தாக்கூர் - வாஷிங்டன் சுந்தர் பார்டனர்ஷிப்பை பார்த்துக்கொண்டு இருந்தேன் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை அபாரமாக வென்றது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் மட்டுமே விராட் கோலி கேப்டனாக செயல்பட்டார். பின்பு மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு குழந்தை பிறக்க இருப்பதால் அடுத்த போட்டிகளில் பங்கேற்காமல் நாடு திரும்பினார். அவர்களுக்கு அழகான பெண் குழந்தையும் பிறந்தது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. அதற்கு முன்னதாக வீடியோ கான்பரிசங் முறையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் விராட் கோலி பேசினார், அப்போது "குழந்தைக்கு தந்தையானது என் வாழ்வின் மிகச்சிறந்த தருணம். இதை இந்தியாவின் வெற்றியுடன் ஒப்பிட முடியாது. நான் இல்லை என்றாலும் அணியுடனான என் தொடர்பு எப்போதும் இருக்கும்" என்றார்.

மேலும் "நான் அங்கு இல்லையென்றாலும் நான் தொடர்ந்து கிரிக்கெட்டை பார்த்துக்கொண்டுதான் வந்தேன். மருத்துவமனையில் இருக்கும்போது டாக்டர்கள் உள்ளே என்னை அழைப்பதற்கு முன்பாக பிரிஸ்பேனில் வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர் பார்ட்னர்ஷிப்பை மொபைலில் பார்த்துக்கொண்டு இருந்தேன்" என்றார் கோலி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com