''இறுதிப்போட்டியில் இந்தியாவும் இங்கிலாந்தும் மோதும்'' - டூ பிளசிஸ் கணிப்பு

''இறுதிப்போட்டியில் இந்தியாவும் இங்கிலாந்தும் மோதும்'' - டூ பிளசிஸ் கணிப்பு
''இறுதிப்போட்டியில் இந்தியாவும் இங்கிலாந்தும் மோதும்'' - டூ பிளசிஸ் கணிப்பு

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவும் இங்கிலாந்தும் மோதுவார்கள் என நினைப்பதாக தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் டூ பிளசிஸ் தெரிவித்துள்ளார்

உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்ரிக்க அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மான்செஸ்ட்டர் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்ரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. கேப்டன் டூ பிளசியின் சதம் மற்றும் டி-காக், வேண்டர் டசன் ஆகியோரின் அரைசதத்தால் தென்னாப்ரிக்க அணி 50 ஓவர்களில் 325 ரன்களைக் குவித்தது. 

326 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 315 ரன்களுக்கே ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து தென்னாப்ரிக்க அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெற்றிக்கு பின்னர் பேசிய தென்னாப்ரிக்கா அணி கேப்டன் டூ பிளசிஸ், ''நாங்கள் வெற்றி பெற்றது இந்தியாவுக்கு மகிழ்ச்சியைத் தரும் என நினைக்கிறேன் என தெரிவித்தார். மேலும் பேசிய அவர், நியூசிலாந்து அணி கடைசி 3 போட்டிகளில் சரியாக விளையாடவில்லை. இறுதிப்போட்டியில் இந்தியாவும், இங்கிலாந்தும் விளையாடும் என நினைக்கிறேன். இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் சிறப்பான ஆட்டத்தை ஆடிவருகிறார்கள்'' என தெரிவித்துள்ளார்.

இந்திய அணி, 13 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருந்தது. நேற்று நடந்த தனது கடைசி லீக்கில் இலங்கையை வீழ்த்தியதால் 15 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது.  இதே போல 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணி, தனது கடைசி லீக்கில் தென்னாப்பிரிக்காவுடன் நேற்று மோதியது. இதில் தோல்வியடைந்ததால், புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது.


இதனால் முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணி, நான்காவது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணியுடன் அரையிறுதியில் மோதுகிறது. மான்செஸ்டரில் வரும் செவ்வாய்க்கிழமை (9 ஆம் தேதி) இந்தப் போட்டி நடக்கிறது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com