“எனக்கு இன்னும் வயசாகல கேப்டன்” - அசத்தல் கேட்ச் பிடித்த பாகிஸ்தான் வீரர் ஷதாப் கான்!

“எனக்கு இன்னும் வயசாகல கேப்டன்” - அசத்தல் கேட்ச் பிடித்த பாகிஸ்தான் வீரர் ஷதாப் கான்!
“எனக்கு இன்னும் வயசாகல கேப்டன்” - அசத்தல் கேட்ச் பிடித்த பாகிஸ்தான் வீரர் ஷதாப் கான்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரை 2 - 0 என வங்கதேச அணி கைப்பற்றி உள்ளது. இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் அசத்தலான கேட்ச் ஒன்றை பிடித்து மாஸ் காட்டியிருந்தார் பாகிஸ்தான் அணியின் 23 வயது ஆல்-ரவுண்டர் ஷதாப் கான். 

இந்த கேட்ச் குறித்து பலரும் வைரலாக பேசி வருகின்றனர். இது குறித்து ஷதாப் கான் தனது கருத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். 

“அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த மற்றொரு வெற்றி. இதில் ஒரு ஹைலைட் என்னவென்றால் : எனக்கு இன்னும் வயசாகல கேப்டன்” என கேப்ஷன் கொடுத்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாமை டேக் செய்துள்ளார் அவர். 

வங்கதேச அணிக்கு எதிரான இந்த டி20 போட்டியில் 4 ஓவர்கள் வீசி 22 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார் அவர். காட் அண்ட் பவுல் முறையில் வங்கதேச வீரர் நஜ்முல்லை அவுட் செய்திருந்தார் அவர். அப்போது தான் அந்த அசத்தல் கேட்ச்சை பிடித்திருந்தார். 

டி20 உலகக் கோப்பை தொடரின் போது ஷதாப் கான் ஒரு ரன்-அவுட் வாய்ப்பை மிஸ் செய்திருந்தார். அதனால் அப்போது பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் “உங்களுக்கு வயதாகிவிட்டது” என சொன்னதாக தெரிகிறது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com