"உலகக் கோப்பை பற்றி யோசிக்கவில்லை" கே.எல்.ராகுல்

"உலகக் கோப்பை பற்றி யோசிக்கவில்லை" கே.எல்.ராகுல்
"உலகக் கோப்பை பற்றி யோசிக்கவில்லை" கே.எல்.ராகுல்

இப்போதும் போல் எப்போதும் விளையாட வேண்டும் டி20 உலகக் கோப்பை குறித்து யோசிக்கவில்லை என்று இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை இந்தியா அபாரமாக விளையாடி 5-0 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றது. இந்தப் போட்டி தொடரின் நாயகனாக கே.எல்.ராகுல் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு விருதும் வழங்கப்பட்டது. அப்போது பேசிய அவர் " நான் இந்தத் தொடரில் மிகச் சிறப்பாகவே பேட்டிங் செய்ததாக நினைக்கிறேன். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இப்போது இருக்கும் இந்த ஆட்டத்திறனை அப்படியே மேம்படுத்த வேண்டும், இதுபோலவே விளையாட வேண்டும்" என்றார்.

டி20 உலகக் கோப்பை குறித்த கேள்விக்கு பதிலளித்த கே.எல்.ராகுல் "உலகக் கோப்பை குறித்து நினைத்துக் கூட பார்க்கவில்லை. இந்தத் தொடரில் விளையாடியது போல இனி வரும் தொடர்களிலும் செயல்பட வேண்டும். நியூசிலாந்தில் அவர்கள் மண்ணில் கிடைத்த இந்த வெற்றி மறக்க முடியாதது. எங்கள் அணியின் ஒட்டுமொத்த திறமையையும் வெளிப்படுத்தியுள்ளோம். உலகக்கோப்பை போட்டிக்கு முன்பாக சில சோதனை முயற்சிகளை செய்து பார்த்தோம். இதேபோல உற்சாகமாக விளையாடி ஒருநாள் தொடரையும் வெல்வோம்" என்றார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com