“அடிலெய்ட் போட்டி ரன் அவுட்டிற்காக கோலியிடம் மன்னிப்பு கேட்டேன்” - ரஹானே

“அடிலெய்ட் போட்டி ரன் அவுட்டிற்காக கோலியிடம் மன்னிப்பு கேட்டேன்” - ரஹானே
“அடிலெய்ட் போட்டி ரன் அவுட்டிற்காக கோலியிடம் மன்னிப்பு கேட்டேன்” - ரஹானே

இந்திய கிரிக்கெட் அணி நாளை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியுடன் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 1 - 0 என முன்னிலை வகிக்கிறது. 

இந்திய அணி முதல் போட்டியில் தோல்வியை தழுவ காரணம் கோலியின் ரன் அவுட்டும்கூட. காரணம், முதல் இன்னிங்ஸில் நல்ல முன்னிலையில் இருந்த இந்திய அணி திடீரென தடுமாற அதுவும் ஒரு காரணம். ஆட்டத்தின் திருப்பு முனை என்றும் அதை சொல்லலாம். லயன் வீசிய 77வது ஓவரின் கடைசி பந்தில் ஸ்ட்ரைக்கில் இருந்த ரஹானே சிங்கிள் எடுக்க முயன்று பிறகு பின் வாங்கியதால் நான் ஸ்ட்ரைக்கரில் இருந்த கோலி ரன் அவுட்டானார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது கோலி கிரீஸில் செட்டாகி இருந்ததோடு 74 ரன்களையும் எடுத்திருந்தார்.

இந்நிலையில் அதற்காக கோலியிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ளார் ரஹானே. “அந்த நாள் ஆட்டத்திற்கு பிறகு நான் கோலியிடம் சென்று நடந்ததற்கு வருத்தம் தெரிவித்தேன். அவர் பரவாயில்லை விடுங்கள் என்றார். எங்கள் இருவருக்குமே ஆட்டத்தின் அந்த சூழல் தெரியும். நன்றாக விளையாடிக் கொண்டிருந்தோம். இருப்பினும் இது கிரிக்கெட் விளையாட்டில் தவிர்க்க முடியாத ஒன்று. அது மிகவும் கடினமான தருணம்” என தெரிவித்தார் ரஹானே. 

கோலி - அனுஷ்கா தம்பதியினருக்கு குழந்தை பிறக்க உள்ள காரணத்தினால் கோலி ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியா திரும்பியுள்ளார். அதனால் இந்திய அணியை அடுத்த மூன்று போட்டிகளில் ரஹானே கேப்டனாக வழிநடத்த உள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com