”மீண்டும் ஒருமுறை சாம்பியன்ஸ் லீக்கை வெல்வேன்” - பிஎஸ்ஜி அணி குறித்து மெஸ்சி பெருமிதம்

”மீண்டும் ஒருமுறை சாம்பியன்ஸ் லீக்கை வெல்வேன்” - பிஎஸ்ஜி அணி குறித்து மெஸ்சி பெருமிதம்
”மீண்டும் ஒருமுறை சாம்பியன்ஸ் லீக்கை வெல்வேன்” - பிஎஸ்ஜி அணி குறித்து மெஸ்சி பெருமிதம்

கால்பந்தாட்ட உலகின் சூப்பர் ஸ்டாரான லியோனல் மெஸ்சி பார்சிலோனா கால்பந்தாட்ட கிளப் அணியிலிருந்து விலகி பிரான்ஸ் நாட்டின் பிரபல கிளப் அணியான PSG-யில் இணைந்துள்ளார். மெஸ்சி அந்த அணிக்காக இரண்டு ஆண்டுகள் விளையாட ஒப்பந்தம் செய்துக் கொண்டுள்ளார். 

இந்நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் மீண்டும் சாம்பியன்ஸ் லீக்கை வெல்வதற்கான வாய்ப்பு அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

“மீண்டும் ஒருமுறை சாம்பியன்ஸ் லீக்கை வெல்வது குறித்த எனது கனவு குறித்து நான் பலமுறை சொல்லியுள்ளேன். இப்போது அந்த வாய்ப்பு கைகூடி வருவதற்கான சரியான இடத்தில் உள்ளேன். நிச்சயம் அது நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. சில நேரங்களில் உலகின் தலைசிறந்த அணிகள் வெற்றி வாய்ப்பை இழக்கும். 

அண்மை காலமாக PSG சாம்பியன்ஸ் லீக் தொடரில் நெருங்கி வருகிறது. மிகச்சிறந்த அணிகள் விளையாடும் தொடர் அது” என மெஸ்சி தெரிவித்துள்ளார். 

மெஸ்ஸி - நெய்மர் - எம்பாப்பே

பிரேசில் அணியின் நெய்மர், பிரான்ஸ் அணியின் கிலியன் எம்பாப்பே உடன் மெஸ்சியும் கூட்டு சேர்ந்து PSG அணிக்காக விளையாட உள்ளார். கூடிய விரைவில் மெஸ்சி அந்த அணிக்காக களம் இறங்கி விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மூவரும் கூட்டு சேர்ந்து எதிரணியினரின் வலைக்குள் கோல்களாக போட்டுத் தாக்குவார்கள் என இப்போதே ரசிகர்கள் கணித்துள்ளனர். அது நடந்தால் PSG அணிக்கு செல்லும் இடம் எல்லாம் வெற்றி தான். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com