டாஸ் வென்றார் தோனி.. நடப்பு ஐபிஎல் சீசனில் முதன் முறையாக பேட்டிங் தேர்வு

டாஸ் வென்றார் தோனி.. நடப்பு ஐபிஎல் சீசனில் முதன் முறையாக பேட்டிங் தேர்வு
டாஸ் வென்றார் தோனி.. நடப்பு ஐபிஎல் சீசனில் முதன் முறையாக பேட்டிங் தேர்வு

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்றது.

ஐபிஎல் தொடரின் 29வது லீக் போட்டி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையே இன்று நடைபெறுகிறது. துபாய் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனால் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசவுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஜெகதீசனுக்கு பதிலாக பியூஷ் சாவ்லா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அபிஷேக் ஷர்மாவிற்கு பதிலாக ஷபாஸ் நதீம் அணியில் இடம்பிடித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் சீசன் தொடங்கியது முதலே டாஸ் வெல்லும் பொழுதெல்லாம் தோனி முதலில் பந்துவீச்சையே தேர்வு செய்து வந்தார். சென்னை அணி சேஸிங் செய்வதில் வல்லமையான அணி என்பதாலும், பின்னால் பனி இருக்கும் என்பதால் அவர் இவ்வார் தேர்வு செய்தார். ஆனால், பெரும்பாலான போட்டிகளில் தோல்வியே மிஞ்சியது. இந்நிலையில், இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற தோனி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com