கோலி, ரோகித் அதிரடி சதத்தால் இந்திய அணி 337 ரன்கள் குவிப்பு

கோலி, ரோகித் அதிரடி சதத்தால் இந்திய அணி 337 ரன்கள் குவிப்பு

கோலி, ரோகித் அதிரடி சதத்தால் இந்திய அணி 337 ரன்கள் குவிப்பு
Published on

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலியின் அதிரடியான சதத்தால் இந்திய அணி 337 ரன்கள் குவித்தது.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் கான்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பு 337 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடி ரோகித் சர்மாவும், விராட் கோலியும் சதம் அடித்தனர். ரோகித் 147(138), கோலி 113(106) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசியில் அதிரடியாக விளையாடிய தோனி 25(17), கேதர் ஜாதவ் 18(10) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். தினேஷ் கார்த்திக் 4 ரன்களில் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

நியூசிலாந்து அணியில் சவுதி, மில்னே, சண்ட்னெர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து 338 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது. ஆடுகளம் பேட்டிங்க்கு சாதகமானது என்பதால் நியூசிலாந்து அணி வெற்றியை தக்க வைக்க தீவிரமாக முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com