முழுநேர டெஸ்ட் கேப்டன் ஆனார் ரோகித் ; இலங்கை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

முழுநேர டெஸ்ட் கேப்டன் ஆனார் ரோகித் ; இலங்கை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

முழுநேர டெஸ்ட் கேப்டன் ஆனார் ரோகித் ; இலங்கை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது. அதில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் முதலில் நடைபெற உள்ளது. வரும் 24, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் டி20 தொடர் நடைபெறுகிறது. மார்ச் 4 மற்றும் 12 தேதிகளில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. 

இந்த நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 மற்றும் டெஸ்ட் என இரண்டு அணிகளுக்கும் ரோகித் ஷர்மா கேப்டனாக அணியை வழிநடத்துகிறார். 

டி20 அணி!

ரோகித் ஷர்மா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், தீபக் சாஹர், தீபக் ஹூடா, ஜடேஜா, சாஹல், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், ஜஸ்பிரித் பும்ரா, ஆவேஷ் கான். 

டெஸ்ட் அணி!

ரோகித் ஷர்மா (கேப்டன்), பிரியங்க் பஞ்சல், மயங்க் அகர்வால், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், ஹனுமா விஹாரி, ஷுப்மன் கில், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), கே.எஸ்.பரத், ஜடேஜா, ஜெயந்த் யாதவ், அஷ்வின், குல்தீப் யாதவ், சவுரப் குமார், முகமது சிராஜ், உமேஷ் யாதவ், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா.

இந்த தொடருக்கான டி20 அணியில் கோலி, பண்ட் ஆகியோர் ஓய்வு எடுத்துக் கொண்டுள்ளதால் இடம் பெறவில்லை. ஜடேஜா மற்றும் பும்ரா அணிக்கு திரும்பியுள்ளனர். டெஸ்ட் அணியில் ரகானே மற்றும் புஜாராவுக்கு இடமில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com