கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், அடுத்த சில நாட்களில் துபாயில் ஆரம்பமாக உள்ளது 2020-க்கான ஐ.பி.எல் தொடர்.
கடந்த சில மாதங்களாக கிரிக்கெட் களத்திற்கு செல்லாமல் இருந்த அனைத்து அணி வீரர்களும் துபாயில் முகாமிட்டு தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனும், இந்திய அணியின் அதிரடி ஓப்பனருமான ‘ஹிட்மேன்’ ரோஹித் ஷர்மா பந்துகளை அடித்து ஆடுவதில் வல்லவர்.
அவர் அண்மையில் மேற்கொண்ட வலைபயிற்சியில் பந்தினை பவுண்டரிக்கு பறக்க விடும் அசுர ஆட்டத்தை, ட்விட்டரில் இருபது நொடிகள் ஓடும் வீடியோவாக பகிர்ந்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.
பார்வையாளர்களுக்கு அனுமதியின்றி நடைபெறவுள்ள இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியோடு தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆட உள்ளது.