தேவையா இது? ரசிகர்களிடம் வாங்கி கட்டிய புனே உரிமையாளர்

தேவையா இது? ரசிகர்களிடம் வாங்கி கட்டிய புனே உரிமையாளர்
தேவையா இது? ரசிகர்களிடம் வாங்கி கட்டிய புனே உரிமையாளர்

ஐபிஎல்லின் இரண்டாவது போட்டியில் புனே அணி வெற்றி பெற்ற பிறகு தோனியை இழிவுப்படுத்தும் வகையில் ட்விட் செய்த அந்த அணியின் உரிமையாளரை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக கண்டித்துள்ளனர்.

ஐபிஎல்லின் இரண்டாவது போட்டியில் மும்பை மற்றும் புனே அணிகள் மோதின. இதில் புனே அணி, போராடி வென்றது. இந்த போட்டியில், 84 ரன்கள் எடுத்த புனே அணி கேப்டன் ஸ்மித் அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார்.

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த புனே அணி உரிமையாளர் ஹர்ஷ் கோயங்கா, “ஸ்மித், யார் ராஜா என காண்பித்துவிட்டார். அனைவரையும் தோனியை விட்டுவிட்டுத் தன்னை பற்றி பேச வைத்துவிட்டார். தோனியை புனே அணி கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கியது சரியான முடிவு”என பதிவிட்டிருந்தார்.

இதனால் ரசிகர்களின் கடும் கோபத்துக்கு ஆளானார் ஹர்ஷ் கோயங்கா. இதற்கு பதிலளித்த கிரிக்கெட் ரசிகர்கள் பலர், “ஸ்மித்தை பாராட்டுங்கள். வேண்டாமென்று சொல்லவில்லை. அதற்காக தோனியை இழிவுப்படுத்தக் கூடாது” என தெரிவித்தனர். இதன் பின்பு அந்த டிவிட்டை நீக்கினார் ஹர்ஷ் கோயங்கா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com