இரண்டு தேவதையையும் மிஸ் செய்கிறேன் என ஹர்திக் பாண்டியா தன் குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்
இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா செர்பியா நாட்டு நடிகை நடாசாவை காதலித்து வந்ததையடுத்து இருவரும்
மோதிரம் மாற்றி நிச்சயம் செய்து கொண்டனர். இதனை தொடர்ந்து நடாசா கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸாடாகிராமில் தெரிவித்திருந்த ஹர்திக் பாண்ட்யா விரைவில் எங்கள் உலகத்தில் இன்னொருவர் இணையப் போகிறார் எனக் கூறியிருந்தார். இதனை தொடர்ந்து அவருக்கு கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். பின்னர் ஹர்திக் பாண்டியா-நடாசா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இஸ்டாவில் இதனை தெரிவித்த ஹர்திக், குழந்தையின் புகைப்படத்தையும் பகிர்ந்துகொண்டார். இந்நிலையில் ஐபிஎல்க்காக துபாய் வந்துள்ள ஹர்திக் பாண்டியா, மனைவியையும், குழந்தையையும் மிஸ் செய்வதாக பதிவிட்டுள்ளார்.
மனைவி நடாசாவுடன் வீடியோகால் பேசியதை புகைப்படமாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள ஹர்திக் பாண்டியா, உங்கள் இருவரையும் வாழ்க்கையில் நான் பெற ஆசீர்வதிக்கப்பட்டுள்ளேன். இரண்டு தேவதையையும் மிஸ் செய்கிறேன் என தெரிவித்துள்ளார்.
ஹர்திக் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் அவரின் குழந்தை க்யூட்டாக இருப்பதாகவும், அழகாக தூங்குவதாகவும் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.