இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: யார் கேப்டன்?

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: யார் கேப்டன்?

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: யார் கேப்டன்?

இங்கிலாந்துக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா மீண்டும் தேர்வாகியுள்ளனர்.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஜூலை 12, 14 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்நிலையில் மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் நிறைய மாற்றங்களும் இருக்கிறது. கொரோனா பாதிப்பு காரணமாக கடைசி டெஸ்ட் போட்டியில் பங்கேற்காத ரோகித் சர்மா, இந்த தொடரில் பங்கேற்பார் என்றும் அவரே அணியை வழிநடத்துவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷிகர் தவான், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் மீண்டும் தேர்வாகியுள்ளனர். கிட்டத்தட்ட ஓராண்டு இடைவெளிக்குப் பின்  ஹர்திக் பாண்டியா ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளார். அதேபோல் ரவீந்திர ஜடேஜாவும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளார். இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்குக்கு ஒருநாள் அணியில் முதல்முறையாக இடம் கிடைத்துள்ளது. தென் ஆப்பிரிக்கா தொடர், அயர்லாந்து தொடர் என டி20 அணியில் அர்ஷ்தீப் சிங் தேர்வாகினாலும், ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் தினேஷ் கார்த்திக், உம்ரான் மாலிக் ஆகியோர் சேர்க்கப்படவில்லை.

3 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், இஷான் கிஷன், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், பும்ரா, பிரசித் கிருஷ்ணா, முகமது ஷமி, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்.

இதையும் படிக்கலாமே: "தோனியைப் போல நேரடியாக இந்திய கேப்டனாக பொறுப்பேற்கிறேன்" - பும்ரா நெகிழ்ச்சி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com