பாண்ட்யா, அக்ஸர், ஷர்துல் டீமில் இருந்து 'அவுட்' ! அதிரடி மாற்றம்

பாண்ட்யா, அக்ஸர், ஷர்துல் டீமில் இருந்து 'அவுட்' ! அதிரடி மாற்றம்
பாண்ட்யா, அக்ஸர், ஷர்துல் டீமில் இருந்து 'அவுட்' ! அதிரடி மாற்றம்

6 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை 2018 கிரிக்கெட் போட்டிகள் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளன. இந்தத் தொடரின் தகுதிச்சுற்றுகளில் இலங்கை மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகள் தோல்வியடைந்து வெளியேறிவிட்டன.

இந்நிலையில் நாளை முதல் சூப்பர் 4 போட்டிகள் தொடங்குகிறது. இதில் தன்னுடைய முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. நேற்று பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் ஹர்டிக் பாண்ட்யாவுக்கு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் ஆட்டத்தின் பாதியிலேயே வெளியே சென்றார். இது தொடர்பாக விளக்கமளித்த "ஹர்டிக் பாண்ட்யாவிற்கு முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.தற்போது அவரால் எழுந்து நிற்க முடிகிறது. மருத்துவக் குழுவினர் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்” எனத் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று பிசிசிஐ திடீரென அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. அதில் ஹர்டிக் பாண்ட்யாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தீபக் சாஹர் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல பாகிஸ்தான் உடனான ஆட்டத்தின் போது மாற்று பீல்டராக களமிறங்கிய அக்ஸர் பட்டேலின் விரலில் காயம் ஏற்பட்டது. எனவே அவருக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், ஹாங்காங் உடனான ஆட்டத்தில் மித வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்குருக்கு இடுப்பு தசைப் பகுதியில் பிடிப்பு ஏற்பட்டதால் அவருக்கு பதிலாக வேகப் பந்து வீச்சாளர் சித்தார்த் கவுல் களம் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த மூன்று வீரர்களும் இன்றே இந்திய அணியுடன் இணைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com