ஒரு கேப்டனா இங்க நிற்க கஷ்டமா இருக்கு: கோலி

ஒரு கேப்டனா இங்க நிற்க கஷ்டமா இருக்கு: கோலி
ஒரு கேப்டனா இங்க நிற்க கஷ்டமா இருக்கு: கோலி

தோல்விக்குப் பிறகு ஒரு கேப்டனாக இங்கு நிற்க கஷ்டமாக இருக்கிறது என பெங்களூர் அணியின் கேப்டன் கோலி கூறினார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த போட்டியில் பெங்களூர்- புனே அணிகள் மோதின. இதில் பெங்களுர் அணி 96 ரன்களில் சுருண்டது. ஏற்கனவே அந்த அணி 46 ரன்கள் எடுத்து ஐபிஎல் போட்டியில் குறைந்த ஸ்கோரை பதிவு செய்திருந்தது. இந்த தோல்வியின் மூலம், அடுத்த சுற்று வாய்ப்பை பெங்களூர் அணி இழந்தது.

இதுபற்றி விராட் கோலி கூறும்போது, ‘இது போன்ற மோசமான தோல்விக்கு பின், கேப்டனாக இங்கு நிற்பது கஷ்டமாக இருக்கிறது. தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, இந்த மோசமான அனுபவத்தை மறக்க வேண்டும். தோல்விக்கான காரணம் இதுதான் என்று எதையும் சொல்ல முடியவில்லை. நாங்கள் பிளே–ஆப் சுற்று வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்து விட்டோம். அடுத்த ஆட்டங்களையும் உற்சாகமாக விளையாடுவோம்’ என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com