"தோனியை குறி வைத்தே தாக்கினேன்" ஷோயப் அக்தர் வாக்குமூலம் !

"தோனியை குறி வைத்தே தாக்கினேன்" ஷோயப் அக்தர் வாக்குமூலம் !
"தோனியை குறி வைத்தே தாக்கினேன்" ஷோயப் அக்தர் வாக்குமூலம் !

2006 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தோனியை குறிவைத்தே பீமர் வகை பந்துகளை வீசியதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.

2006 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அந்த நினைவுகளை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ராவுடன் பகிர்ந்துக்கொண்டார் ஷோயப் அக்தார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் "பைசலாாபாத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தொடர்ச்சியாக 9 ஓவர்கள் பந்துவீசி வந்தேன். அப்போது அந்த இன்னிங்ஸில் தோனி சதம் அடித்தார்" என்றார்.

மேலும் "தோனி சதம் அடித்து முடித்தவுடன். நான் அவரை குறிவைத்தே பீமரை வீசினேன். பின்பு அதற்காக தோனியிடம் மன்னிப்பும் கேட்டேன். அப்போதுதான் என் கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு பேட்ஸ்மேனுக்கு வேண்டுமென்றே பீமரை வீசினேன். அதை நான் செய்திருக்கக் கூடாது. அதற்காக பிறகு நான் மிகவும் வருந்தினேன். அன்றையப் போட்டியில் நான் எப்படிப் போட்டாலும் தோனி அடித்துக்கொண்டே இருந்தார். அதனால் நான் கொஞ்சம் வெறுப்படைந்தேன்" என மனம் திறந்துள்ளார் ஷோயப் அக்தர்.

பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தின்போது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தோனி 179 ரன்கள் எடுத்தார். அதில் பைசலாபாத் டெஸ்ட் போட்டியில் மட்டும் 148 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com