பாராசின் ஓபன் செஸ் போட்டி: சாம்பியன் பட்டத்தை வென்று பிரக்ஞானந்தா அசத்தல்

பாராசின் ஓபன் செஸ் போட்டி: சாம்பியன் பட்டத்தை வென்று பிரக்ஞானந்தா அசத்தல்

பாராசின் ஓபன் செஸ் போட்டி: சாம்பியன் பட்டத்தை வென்று பிரக்ஞானந்தா அசத்தல்
Published on

இந்தியாவின் இளம் செஸ் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா பாராசின் ஓபன் செஸ் போட்டியில் வென்றுள்ளார்.

பாராசின் ஓபன் செஸ் தொடர் செர்பியாவில் நடைபெற்றது. அதில் ஸ்ரீஜா சேஷாத்ரி, லாசெசர் யோர்டானோவ், காசிபெக் நோகர்பெக், கவுஸ்டாவ் சாட்டர்ஜி, அரிஸ்டன்பெக் உராசயேவ் ஆகியோரை சென்னையை சேர்ந்த இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா வென்றார். இந்நிலையில் மொத்தம் 9 சுற்றுகள் கொண்ட இந்தத் தொடரில் 7 வெற்றி, 2 'டிரா' உள்பட 8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த  பிரக்ஞானந்தா, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். ரஷியாவின் அலெக்சாண்டர் பிரெட்கே, 7.5 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்தார்.

மகாபலிபுரத்தில் நடைபெறவுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவின் பி அணி சார்பாக  பிரக்ஞானந்தா பங்கேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாம்: "எனக்கு எப்பவுமே ஒரே மைண்ட் செட்" - சூர்யகுமார் யாதவ் அதிரடி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com