ஐபிஎல் கிரிக்கெட்டில் மீண்டும் கங்குலி.. உறுதி செய்தது டெல்லி கேபிட்டல்ஸ் நிர்வாகம்!

ஐபிஎல் கிரிக்கெட்டில் மீண்டும் கங்குலி.. உறுதி செய்தது டெல்லி கேபிட்டல்ஸ் நிர்வாகம்!
ஐபிஎல் கிரிக்கெட்டில் மீண்டும் கங்குலி.. உறுதி செய்தது டெல்லி கேபிட்டல்ஸ் நிர்வாகம்!

மீண்டும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் இணைய உள்ளார் சவுரவ் கங்குலி.

பிசிசிஐ தலைவராக இருந்த சவுரவ் கங்குலி, கடந்த அக்டோபர் மாதம் அப்பொறுப்பிலிருந்து விலகினார். மீண்டும் அந்தப் பதவிக்கு அவர் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், பிசிசிஐ அவரைத் தவிர்த்துவிட்டு புதிய தலைவராக முன்னாள் வீரர் ரோஜர் பின்னி தேர்ந்தெடுக்கப்பட்டார். பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலகிய செளரவ் கங்குலி, ஐஎல்டி 20 அணியான துபாய் கேப்பிடல்ஸ் மற்றும் எஸ்ஏடி 230 லீக் அணியான பிரிட்டோரியா கேபிட்டல்ஸுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில், சவுரவ் கங்குலி, வரும் ஏப்ரலில் தொடங்க இருக்கும் ஐபிஎல் 16வது சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் இணைய உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. அதற்கான ஒப்பந்தங்கள் நிறைவு பெற்றுள்ளதாக அவ்வணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அணி நிர்வாகம், “கங்குலி ஏற்கெனவே எங்களுக்கு வழிகாட்டியாக இருந்தார். அவர், அனைத்து தரப்பினருக்கும் நல்ல பங்களிப்பை வழங்கியிருந்தார். ஆகையால், தொடர்ந்து இந்த ஐபிஎல்லிலும் அவருடைய பங்களிப்பை எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் கங்குலி இணைந்து செயல்பட்டபோது அவ்வணியின் வழிகாட்டியாக இருந்தார். மேலும், டெல்லி கேப்பிட்டல்ஸின் சமீபத்திய ஏலத் தேர்வுகளில் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் மற்றும் கங்குலியின் பங்களிப்பு அதிகம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com