காவல் துறையினருக்கான விளையாட்டுப் போட்டிகள் - சென்னை பெருநகர காவல்துறை சாம்பியன்

காவல் துறையினருக்கான விளையாட்டுப் போட்டிகள் - சென்னை பெருநகர காவல்துறை சாம்பியன்
காவல் துறையினருக்கான விளையாட்டுப் போட்டிகள் - சென்னை பெருநகர காவல்துறை சாம்பியன்

தமிழ்நாடு காவல் மண்டலங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் சென்னை பெருநகர காவல்துறை சாம்பியன் பட்டத்தை வென்றது.

தமிழ்நாடு காவல்துறையினரின் விளையாட்டு திறமையை வெளிப்படுத்தும் விதமாக நடத்தப்படும் இந்தப் போட்டிகளில், ஆணழகன், பளு தூக்குதல், மல்யுத்தம், வலு தூக்குதல், குத்துச்சண்டை ஆகிய விளையாட்டுகள் இடம்பெற்றன.

சென்னையில் 2 நாட்கள் நடத்தப்பட்ட போட்டிகளில் தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் என 410 பேர் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர். மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட இளைஞரை சுமந்து சென்று முதலமைச்சரால் பாராட்டப்பட்ட டி.பி.சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி பளு தூக்குதல் போட்டியில் பங்கேற்றார். ஆணழகன் போட்டியில் பல பதக்கங்களை வென்று சாதித்து வரும் போக்குவரத்து தலைமை காவலர் புருஷோத்தமன் போட்டியாளர்களை வியக்க வைத்தார். புள்ளிகள் அடிப்படையில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை சென்னை மாநகர காவல்துறை வென்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com