தியோதர் டிராபி: கெய்க்வாட், அபராஜித் அதிரடியால், இந்திய பி அணி வெற்றி!

தியோதர் டிராபி: கெய்க்வாட், அபராஜித் அதிரடியால், இந்திய பி அணி வெற்றி!
தியோதர் டிராபி: கெய்க்வாட், அபராஜித் அதிரடியால், இந்திய பி அணி வெற்றி!

தியோதர் கோப்பைக்கான தொடரில் நேற்று நடந்த போட்டியில் இந்திய பி அணி, 108 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தியோதர் டிராபிக்கான உள்ளூர் ஒரு நாள் போட்டித் தொடரின் லீக் ஆட்டங்கள் நேற்று தொடங்கியது. நவம்பர் 4-ஆம் தேதி வரை நடக்கும் இத்தொடரில் இந்தியா ஏ, பி, சி என மூன்று அணிகள் மோதுகின்றன. ஏ அணிக்கு ஹனுமா விஹாரி, பி அணிக்கு பார்திவ் பட்டேல், சி அணிக்கு சுப்மான் கில் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ராஞ்சியில் நேற்று நடந்த போட்டியில் இந்தியா ஏ -பி அணிகள் மோதின. டாஸ் வென்ற ஏ அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய பி அணி முதலில் பேட்டிங் செய்தது.

ருதுராஜ் கெய்க்வாட் (113), தமிழக வீரர் பாபா அபராஜித் (101) ஆகியோரின் அபார ஆட்டத்தால் பி அணி 6 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் எடுத்தது. ஏ அணி தரப்பில் உனட்கட், ரவிச்சந்திரன் அஸ்வின் தலா 2 விக்கெட்டையும் சித்தார்த் கவுல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய இந்திய ஏ அணி 47.2 ஓவரில் 194 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அந்த அணியில், கேப்டன் விஹாரி அதிகப்பட்சமாக 59 ரன்கள் எடுத்தார்.

பி அணியின் பந்துவீச்சாளர்கள் கலாரியா 3 விக்கெட்டுகளும் முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். மூன்று பேர் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து இந்திய பி அணி 108 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com