பிரெஞ்சு ஓபன் 2022: 14-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ரபேல் நடால்

பிரெஞ்சு ஓபன் 2022: 14-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ரபேல் நடால்
பிரெஞ்சு ஓபன் 2022: 14-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ரபேல் நடால்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டிக்கு 14-வது முறையாக முன்னேறி உள்ளார் ரபேல் நடால்.

கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. நேற்று ஆண்கள் ஒன்றையர் பிரிவில் அரை இறுதி ஆட்டங்கள் நடைபெற்றது. இந்த அரை இறுதி போட்டியில் 5-ம் நிலை வீரர் ஸ்பெயினின் ரபேல் நடால் மற்றும் 3-ம் நிலை வீரர் ஜெர்மனியின் ஸ்வெரேவ் மோதினர். இந்த ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. முதல் சுற்றை 7-6 என்ற செட் கணக்கில் நடால் கைப்பற்றினார். இதில் 2வது சுற்று ஆட்டத்தின் போது ஸ்வெரெவ்க்கு காலில் காயம் ஏற்பட்டது, காயத்தால் பாதிக்கப்பட்ட அவரால் இந்த போட்டியை தொடர முடியவில்லை. இதனால் போட்டியிலிருந்து ஸ்வெரெவ் விலகினார். இதையடுத்து பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டிக்கு ரபேல் நடால் முன்னேறினார் .

21 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள நடால், பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை 13 முறை கைப்பற்றியுள்ளார். அவர் 14-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

மற்றொரு அரையிறுதிப் போட்டியில் பிரெஞ்ச் ஓபனில் முதல் முறையாக அரை இறுதிக்கு தகுதி பெற்ற நார்வேயின் காஸ்பர் ரூட், குரோசியாவின் மெரின் சிலிச்சுடன் மோதினார். முதல் செட்டை 6-3 என சிலிச் கைப்பற்றினார். 2,3 மற்றும் 4-வது செட்டை, காஸ்பர் ரூட் 6-4, 6-2, 6-2 என கைப்பற்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ரபேல் நடாலும், காஸ்பர் ரூட்டும் மோத உள்ளனர்.

இதையும் படிக்கலாம்: 'நான் நம்பர் ஒன் வீரரா?' - தினேஷ் கார்த்திக் பாராட்டுக்கு பாபர் அசாம் பதில்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com