“ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ராகுல் எல்லாம் தோனி வழியில்தான் நடக்கிறார்கள்!”-ஜாஸ் பட்லர்

“ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ராகுல் எல்லாம் தோனி வழியில்தான் நடக்கிறார்கள்!”-ஜாஸ் பட்லர்
“ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ராகுல் எல்லாம் தோனி வழியில்தான் நடக்கிறார்கள்!”-ஜாஸ் பட்லர்

“இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், கே.எல். ராகுல் மாதிரியான இளைஞர்கள் அனைவரும் முன்னாள் கேப்டன் தோனியின் வழியில் தான் நடக்கிறார்கள். அவர்கள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மற்றும் கேப்டன்களாக உருவாக காரணம் தோனி போட்டுள்ள விதைதான். 

விக்கெட் கீப்பருக்குதான் ஆட்டத்தின் மீதான பார்வை கூர்மையாக இருக்கும் என கருதுகிறேன். ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ற வகையில் முடிவுகளை எடுக்கவும், பந்து வீச்சாளர்களின் பந்து வீசும் தன்மையையும் அறிந்து அதற்கேற்ற வகையில் கள முடிவுகளை எடுக்கலாம் என நான் நினைக்கிறேன்” என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜாஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.  

நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை அணியை தோனியும், டெல்லி அணியை ரிஷப் பண்ட்டும், பஞ்சாப் அணியை கே. எல். ராகுலும், ராஜஸ்தான் அணியை சஞ்சு சாம்சனும் விக்கெட் கீப்பர் கேப்டன்களாக அணியை வழி நடத்துகின்றனர். 

பட்லர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பிடித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com