ஹர்திக் பாண்ட்யாவுக்காக ஜடேஜா விட்டுக்கொடுத்திருக்க வேண்டும்: சங்ககாரா

ஹர்திக் பாண்ட்யாவுக்காக ஜடேஜா விட்டுக்கொடுத்திருக்க வேண்டும்: சங்ககாரா

ஹர்திக் பாண்ட்யாவுக்காக ஜடேஜா விட்டுக்கொடுத்திருக்க வேண்டும்: சங்ககாரா
Published on

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்ட்யாவுக்காக ஜடேஜா ரன்அவுட் ஆகி, அவரை விளையாட விட்டிருக்க வேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்ககாரா கூறியுள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நேற்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. 339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. முன்னணி வீரர்கள் சீட்டுக்கட்டு போல் சரிய இந்தியா 72 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டை இழந்து திணறியது. 7வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்ட்யா உடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். ஹர்திக் பாண்ட்யா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 43 பந்தில் 4 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 76 ரன்கள் குவித்து துரதிருஷ்டவசமாக ரன்அவுட் ஆனார்.

ஜடேஜா பந்தை ஆஃப் சைடு அடித்தபோது, அது நேராக ஃபிரண்ட்லைன் ஃபீல்டருக்கு சென்றுவிட்டது. எதிர்முனையில் இருந்த ஹர்திக் பாண்ட்யா விரைவாக ஓடி வந்துவிட்டார். இந்த குழப்பத்தில் ஜடேஜாவும் திரும்ப பேட்டிங் சைடு கிரீஸுக்கு திரும்பிவிட்டார். இதனால் பாண்ட்யா அவுட் ஆனார். இந்திய வீரர்கள் யாரும் இதை விரும்பவில்லை. மேலும், ஜடேஜா அடுத்த ஓவரில் ஆட்டம் இழந்தார்.

இதுகுறித்து இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும், சிறந்த வீரருமான சங்ககாரா கூறுகையில், “ஹர்திக் பாண்ட்யாவுக்காக, ஜடேஜா தனது விக்கெட்டை விட்டுக் கொடுத்திருக்கலாம். இந்த ரன்அவுட்டை இந்தியா விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com