தோனி குறித்து ஒரே வார்த்தையில் சொன்ன அக்தர்: ரசிகர்கள் செம ஹேப்பி!

தோனி குறித்து ஒரே வார்த்தையில் சொன்ன அக்தர்: ரசிகர்கள் செம ஹேப்பி!
தோனி குறித்து ஒரே வார்த்தையில் சொன்ன அக்தர்: ரசிகர்கள் செம ஹேப்பி!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் சமூக வலைத்தளங்களில் படு பிசியாக இயங்கி வருபவர். சமயங்களில் இந்திய கிரிக்கெட் வீரர்களை ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளுவார். கூடவே ரசிகர்களுடன் “கேள்வி - பதில்” செக்ஷன் நடத்தி அதற்கு பதிலும் கொடுப்பார். 

அந்த வகையில் அக்தர் நேற்று ட்விட்டரில் நடத்திய Q&A செக்ஷனில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ரசிகர் ஒருவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை ஒரே வார்த்தையில் விவரிக்கும்படி அக்தரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் கொடுத்துள்ள பதில் ஒவ்வொரு தோனி ரசிகரின் நெஞ்சத்தையும் வென்றுள்ளது. 

“அந்த பெயரே ஒரு சகாப்தம்” என்பதுதான் அக்தர் தோனி குறித்த கேள்விக்கு சொன்ன பதில். 

“அவர் பெற்றிடாத வெற்றிகளே கிடையாது. ராஞ்சியை சேர்ந்த அவர் தந்து ஆட்டத்தால் இந்தியாவையே அசரடித்துள்ளார். அதை விட அவரது ரசிகர்களுக்கு வேறு என்ன வேண்டும். உங்களை என்றென்றும் கிரிக்கெட் உலகம் கொண்டாடும். இந்திய மக்கள் ஒருபோதும் உங்களை மறக்க மாட்டார்கள்” என தோனி கடந்த 2020 ஆகஸ்ட் 15 அன்று ஒய்வு முடிவை அறிவித்தபோது அக்தர் தெரிவித்திருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com