விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை: விண்ணப்பங்களை வரவேற்கிறது இந்திய உணவுக் கழகம்

விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை: விண்ணப்பங்களை வரவேற்கிறது இந்திய உணவுக் கழகம்
விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை: விண்ணப்பங்களை வரவேற்கிறது இந்திய உணவுக் கழகம்

விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை வழங்கும் விதமாக விண்ணப்பங்களை வரவேற்கிறது இந்திய உணவுக் கழகம்

2021-22 ஆம் ஆண்டில் கால்பந்து, ஹாக்கி, கிரிக்கெட் மற்றும் பளுதூக்கல் (ஆண்களுக்கு), டேபிள் டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் (பெண்களுக்கு) போட்டிகளில் 15-18 மற்றும் 18-24 வயதில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை அளிப்பதற்கான விண்ணப்பங்களை தென்மண்டல இந்திய உணவுக் கழகம் வரவேற்கிறது.

தமிழகம், தெலங்கானா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரளா, லட்சத்தீவுகள் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் இந்த உதவித் தொகையைப் பெறுவதற்கு 20.10.2021 அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ விண்ணப்பிக்கலாம். வளர்ந்து வரும், திறமைமிக்க, இளம் விளையாட்டு வீரர்களை, குறிப்பாக ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த பின்தங்கிய பிரிவினர் இடையே விளையாட்டை ஊக்குவிப்பதற்காக இந்திய உணவு கழகம் உதவித்தொகையை வழங்குகிறது.


மேலும் விவரங்களுக்கு www.fci.gov.in என்ற இணையதளத்தைக் காணவும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com