இன்று 2-வது ஒருநாள் போட்டி: பார்முக்கு வரலையே பஞ்சாப் சிங்கம்!

இன்று 2-வது ஒருநாள் போட்டி: பார்முக்கு வரலையே பஞ்சாப் சிங்கம்!

இன்று 2-வது ஒருநாள் போட்டி: பார்முக்கு வரலையே பஞ்சாப் சிங்கம்!
Published on

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது. 

வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதலாவது ஒரு நாள் போட்டி, போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று முன்தினம் நடந்தது. மழை காரணமாக ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது. தொடரின் முதல் ஆட்டமே ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் இரண்டாவது ஒரு நாள் போட்டி, இன்று மாலை நடக்கிறது.

இந்திய அணியில் பஞ்சாப் சிங்கமான, யுவராஜ் சிங்கின் பார்ம் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் அரைசதம் அடித்தார் சிங். அதன்பிறகு பேட்டிங்கில் அவர் சோபிக்கவில்லை. 2019-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு தயாராவதற்கான திட்டத்தில் யுவராஜ்சிங்குக்கு அணியில் இடம் உண்டா? இல்லை என்றால் அவருக்கு பதில் வேறு வீரருக்கு வாய்ப்பு அளிப்பது குறித்து யோசிக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் கூறியிருப்பது அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 

இதற்கிடையே இன்றும் அங்கு மழை வர வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதால் இன்றைய போட்டிக்கும் சிக்கல் இருக்கலாம் எனத் தெரிகிறது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com