நாளை, முதல் டி20 போட்டி: நியூசிலாந்து தீவிரம்

நாளை, முதல் டி20 போட்டி: நியூசிலாந்து தீவிரம்

நாளை, முதல் டி20 போட்டி: நியூசிலாந்து தீவிரம்
Published on

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான டி 20 கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. இந்த தொடரையாவது வெல்ல வேண்டும் என்று நியூசிலாந்து அணி தீவிரம் காட்டிவருகிறது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டித் தொடரை இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து டி20 தொடரை கைப்பற்றும் நோக்கத்தில் நியூசிலாந்து அணி தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளது. முதல் போட்டி டெல்லி ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. ஒருநாள் தொடரைத் தொடர்ந்து இத் தொடரையும் வெல்லும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது. 
வேகப்பந்து வீச்சா‌ளர் ஆசிஷ் நெஹ்ரா நாளைய போட்டியுடன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெறவுள்ளார். அவரை வெற்றியுடன் வழியனுப்பும் வகையில் இந்திய அணி வீரர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com