இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் வர்ணனையாளர் சந்திரா நாயுடு காலமானார்!

இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் வர்ணனையாளர் சந்திரா நாயுடு காலமானார்!
இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் வர்ணனையாளர் சந்திரா நாயுடு காலமானார்!

இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் வர்ணனையாளரான சந்திரா நாயுடு உடல்நலக் குறைவினால் இந்தூரில் ஞாயிற்றுக்கிழமை காலமானார். இதனை அவரது சகோதரியின் மகன் உறுதி செய்துள்ளார். சந்திரா நாயுடுக்கு வயது 88. இவர் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதல் கேப்டனான சி.கே நாயுடுவின் மகள் ஆவார். 

சிறு வயது முதலே கிரிக்கெட் மீது தீராக் காதல் கொண்டிருந்தார். அந்த ஆர்வம் அவரை உள்ளூர் கிரிக்கெட்டில் திறம்பட செயலாற்ற வைத்துள்ளது. தொடர்ந்து கிரிக்கெட் வர்ணனையாளராக 1970களில் சந்திரா நாயுடு செயல்பட தொடங்கினார். அவர் ஓய்வு பெற்ற ஆங்கில பேராசிரியை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

பெண்கள் மத்தியில் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் பல முயற்சிகளை அவர் மேற்கொண்டார். அவரது மறைவிற்கு பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com