இலங்கைக்கு எதிராக நேற்று நடந்த 2-வது டி20 போட்டியில் ரோகித் சர்மா சாதனை சதம் அடித்தார். இதையடுத்து சமூக வலைத்தளங்களில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
இந்தூரில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா, 35 பந்துகளில் சதம்அடித்தார். அவர் 118 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் டி20 போட்டிகளில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த தென்னாப்பிரிக்கா வீரர் டேவிட் மில்லரின் சாதனையை ரோகித் சமன் செய்தார்.
இந்த சாதனைகளை நிகழ்த்தியுள்ள ரோகித் சர்மாவுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்துவருகின்றன. சுரேஷ் ரெய்னா, ரஸல் அர்னால்ட், அஸ்வின், மேக்லஹன், சஞ்சய் மஞ்சரேக்கர், விவிஎஸ். லக்ஷமண், ஆகாஷ் சோப்ரா, ஹர்ஷா போக்ளே மற்றும் ஏராளமான ரசிகர்கள் ரோகித்தை பாராட்டி ட்விட் செய்துள்ளனர்.