ப்ளூவேல் கேம் அட்மினை கண்டுபிடித்தால் ரூ.1 லட்சம் பரிசு

ப்ளூவேல் கேம் அட்மினை கண்டுபிடித்தால் ரூ.1 லட்சம் பரிசு
ப்ளூவேல் கேம் அட்மினை கண்டுபிடித்தால் ரூ.1 லட்சம் பரிசு

உயிரைப் பறிக்கும் ஆபத்தான ப்ளுவேல் விளையாட்டின் அட்மினைக் கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது. 

உலகம் முழுவதும் உள்ள பெற்றோர்களிடையே ப்ளூவேல் எனும் உயிர்க்கொல்லி விளையாட்டு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் ப்ளூவேல் கேம் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் உயிரை மட்டும் பறித்து வருகிறது. இந்த விளையாட்டால் மதுரை சேர்ந்த விக்னேஷ் என்ற சிறுவன் பலியான சம்பவம் சமீபத்தில் தமிழகத்தில் பூகம்பத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து யார் ப்ளூவெல் விளையாட்டைப் பரப்பினாலும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில், ப்ளுவேல் விளையாட்டின் அட்மின் குறித்த தகவல்களை சைபர் கிரைம் போலீசாருக்கு 079-22871917 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்‌கலாம் என‌ குஜராத் மாநில‌ உள்துறை அமைச்சர் பிரதீப் சிங்க் ஜடேஜா தெரிவித்துள்ளார். அவ்வாறு தெரிவிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com