“நடராஜனின் கதை அனைவருக்குமே இன்ஸ்பிரேஷன்!” - உருக்கமாக பேசிய ஹர்திக் பாண்ட்யா

“நடராஜனின் கதை அனைவருக்குமே இன்ஸ்பிரேஷன்!” - உருக்கமாக பேசிய ஹர்திக் பாண்ட்யா
“நடராஜனின் கதை அனைவருக்குமே இன்ஸ்பிரேஷன்!” - உருக்கமாக பேசிய ஹர்திக் பாண்ட்யா

இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி கான்பரா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 302 ரன்களை குவித்தது. அதற்கு பெரிய பங்களிப்பை கொடுத்தார் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா.

76 பந்துகளில் 92 ரன்களை குவித்தார் அவர். இந்த போட்டியில் இந்தியா 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை பாண்ட்யா பெற்றார். 

ஆட்டநாயகன் விருதினை பெற்ற பின் பேசிய பாண்ட்யா,  “இந்தியாவுக்காக விளையாடுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் அணியின் பந்துவீச்சாளர் நடராஜன் எளிமையான பின்புலத்தில் இருந்து வந்தவர். அவரது கதை அனைவருக்குமே இன்ஸ்பிரேஷன்.  

ஆஸ்திரேலியாவில் விளையாடும் போது ஆட்டத்தில் வெற்றி  பெற அதிக மெனக்கெட வேண்டி இருக்கும்” என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com