’உங்களைச் சொல்லல’: அனுஷ்கா சர்மாவிடம் மன்னிப்பு கேட்ட பரூக் என்ஜினீயர்

’உங்களைச் சொல்லல’: அனுஷ்கா சர்மாவிடம் மன்னிப்பு கேட்ட பரூக் என்ஜினீயர்
’உங்களைச் சொல்லல’: அனுஷ்கா சர்மாவிடம் மன்னிப்பு கேட்ட பரூக் என்ஜினீயர்

தனது கருத்தால் நடிகை அனுஷ்கா சர்மா மனம் புண்பட்டிருந்தால், அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பரூக் என்ஜினீயர் கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பை போட்டியின் போது, இந்திய அணி கேப்டன் விராத் கோலி மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மாவுக்கு அணி தேர்வாளர்களில் ஒருவர், தேநீர் கொடுத்து உபசரித்தார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் பரூக் என்ஜினீயர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. தேர்வுக் குழுவினரை சாடிய அவர், யார் பெயரையும் குறிப்பிடவில்லை. இந்நிலையில் இந்தக் குற்றச்சாட்டை மறுத்து, நடிகை அனுஷ்கா நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.


தனக்குத் தேர்வாளர்கள் யாரும் தேநீர் வழங்கவில்லை என்றும் உலகக் கோப்பைத் தொடரில், போட்டியை தேர்வாளர்களுக்கான அறையில் இருந்து பார்க்கவில்லை என்றும் உங்கள் சர்ச்சைக்குள் தேவையில்லாமல் எனது பெயரை இழுக்க வேண்டாம் என்றும் அதை அனுமதிக்க மாட்டேன் என்றும் கூறியிருந்தார்.

இதற்கிடையே தனது கருத்துக்கு பரூக் என்ஜினீயர், மன்னிப்புக் கேட்டுள்ளார். அவர் கூறும்போது, ‘இந்தச் சம்பவத்தில் அனுஷ்கா சர்மாவை நான் ஏதும் சொல்லவில்லை. அவர் சிறந்த பெண்மணி. நான் நகைச்சுவைக்காக சொன்ன விஷயம் பெரிதாக ஊதப்படுகிறது. தேர்வாளர்கள் மீதுதான், என் கோபமே தவிர, அனுஷ்கா மீது இல்லை. நான் கூறிய கருத்தால் அனுஷ்கா மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com