ஆர்சிபியின் புதிய கேப்டன் இவர் தான்.. உடைந்த சஸ்பென்ஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்

ஆர்சிபியின் புதிய கேப்டன் இவர் தான்.. உடைந்த சஸ்பென்ஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்
ஆர்சிபியின் புதிய கேப்டன் இவர் தான்.. உடைந்த சஸ்பென்ஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்

ஆர்சிபியின் புதிய கேப்டனாக விராட் கோலிக்கு பதிலாக ஃபாஃப் டு பிளெசிஸ் பொறுப்பேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டிகள் மார்ச் 26ம் தேதி முதல் தொடங்குகின்றன. ஐபிஎல் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா அணியும் மோதுகின்றன. இந்நிலையில், ஐபிஎல் 2022 போட்டியில் விளையாடும் 10 அணிகளில் ஆர்சிபி அணி மட்டுமே கேப்டன் பெயர் மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்தது.

தற்போது அந்த அணியின் கேப்டனாக பாப்டூப்ளசிஸ் செயல்படுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் சிஎஸ்கே அணியில் விளையாடிய ஃபாஃப் டு பிளெஸ்சிஸ், இந்தமுறை ஆர்சிபி அணிக்குத் தேர்வாகியுள்ளதால் அவருடைய பெயரை கேப்டனாக அறிவிப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பு நிலவியது.

ஐபிஎல் 2021 போட்டிக்குப் பிறகு ஆர்சிபி அணி கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகினார். ஆர்சிபி அணி இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை.விராட் கோலி தலைமையில் 2016-ல் ஆர்சிபி அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com