வரும் ஏப்ரல் - மே மாத மாதத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் 2021 சீசனுக்கான ஏலம் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் 299 வீரர்கள் ஏலம் விடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை 27 வீரர்களை ஐபிஎல் தொடரில் பங்கேற்று உள்ள 8 அணிகளின் நிர்வாகம் ஏலத்தில் எடுத்துள்ளது. அது போக முப்பதுக்கும் மேற்பட்ட வீரர்கள் ஏலத்தில் விலை போகாமல் உள்ளனர். இதில் சர்வதேச கிரிக்கெட்டில் அனுபவம் வாய்ந்த வீரர்களும் அடங்கும்.
குறிப்பாக கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த ஹர்பஜன் சிங் மற்றும் கேதர் ஜாதவ் மாதிரியானவர்களும் விலை போகாமல் உள்ளனர். மேலும் ஜேசன் ராய், சேம் பில்லிங்ஸ், அலெக்ஸ் கேரி, அடில் ரஷீத், அங்கித் சிங் ராஜ்புட் மாதிரியான வீரர்களும் அடங்கும்.