'ஆஸ்திரேலியாவை வீழ்த்த துருப்புச்சீட்டு இவர்தான்' - சுனில் ஜோஷி ஆரூடம்

'ஆஸ்திரேலியாவை வீழ்த்த துருப்புச்சீட்டு இவர்தான்' - சுனில் ஜோஷி ஆரூடம்
'ஆஸ்திரேலியாவை வீழ்த்த துருப்புச்சீட்டு இவர்தான்' - சுனில் ஜோஷி ஆரூடம்

'ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த வேண்டும் என்றால் குல்தீப் யாதவ் தான் முக்கிய துருப்புச்சீட்டாக இருப்பார்' என்கிறார் முன்னாள் வீரர் சுனில் ஜோஷி.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்து அணியுடனான டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதனை முடித்த கையுடன் இந்திய அணி ஆஸ்திரேலியாக்கு எதிராக 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் மோதவுள்ளது. முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறும். இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் 9-ம் தேதி நாக்பூரில் தொடங்க உள்ளது

இந்நிலையில், இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியை இந்தியா வீழ்த்த வேண்டும் என்றால் குல்தீப் யாதவ் தான் முக்கியமானவராக இருப்பார் என தெரிவித்துள்ளார்.இந்திய தேர்வுக் குழுவின் முன்னாள் தலைவர் சுனில் ஜோஷி. இதுகுறித்து ESPNCricinfo உடனான உரையாடலில் பேசிய சுனில் ஜோஷி, ''குல்தீப் யாதவ் அருமையான ஃபார்மில் உள்ளார். அவர் விக்கெட் எடுக்கும் முறையை நன்கு கவனித்து வருகிறேன். போல்ட் ஆவது, ஸ்லிப் கேட்ச், ஸ்டம்பிங், மிட் ஆஃப், மிட் ஆன் கேட்ச்கள் போன்றவையே ஸ்பின்னர்கள் மிகவும் விரும்புவது. அதில் குல்தீப் கை தேர்ந்துள்ளார்.

ஒருவேளை ஜடேஜா உடற்தகுதியை நிரூபிக்கவில்லை என்றால், அஸ்வின் முதல் தேர்வாக இருப்பார். பின் அக்‌ஷர் படேல் மற்றும் குல்தீப் ஆகியோர் மீதமுள்ள இடத்தை பிடிப்பார்கள். ஒருவேளை ஜடேஜாவும் விளையாடினால், 3வது ஸ்பின்னராக குல்தீப் தான் சேர்க்கப்பட வேண்டும். கள சூழலை யோசிக்க வேண்டாம், குல்தீப்பின் ஃபார்மை மட்டும் பாருங்கள்.

குல்தீப் யாதவ் எடுத்த அனைத்து விக்கெட்களும், 30 யார்ட் வட்டத்திற்குள்ளே தான் இருந்தன. அதுவும் தொடர்ச்சியாக அதற்குள்ளாக தான் கேட்ச்-கள் பிடிக்கப்பட்டன. அந்த அளவிற்கு லைன் மற்றும் லெந்த் சிறப்பாக உள்ளது. எனவே ஆஸ்திரேலியவை இந்தியா வீழ்த்த வேண்டும் என்றால் குல்தீப் யாதவ் தான் முக்கிய துருப்பாக இருப்பார்'' என்றார்.



Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com