’சுயநலம் இல்லை’ - தினேஷ் கார்த்திக் குறித்து பேசிய புதிய கேப்டன் இயான் மார்கன்

’சுயநலம் இல்லை’ - தினேஷ் கார்த்திக் குறித்து பேசிய புதிய கேப்டன் இயான் மார்கன்
’சுயநலம் இல்லை’ -  தினேஷ் கார்த்திக் குறித்து பேசிய புதிய கேப்டன் இயான் மார்கன்

கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியை தினேஷ் கார்த்திக் ஏன் விட்டுக்கொடுத்தார் என்ற காரணம் குறித்து இயான் மார்கன் விளக்கமளித்துள்ளார்.

கொல்கத்தா அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் கடந்த ஆண்டு முதல் அந்த அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்றைய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பு அணியின் புதிய கேப்டனாக இயான் மார்கன் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இது குறித்து இயான் மார்கன் "போட்டிக்கு முந்தைய இரவுதான் தினேஷ் கார்த்திக்கிடம் கேப்டன் பதவி மாறுதல் குறித்து தெரிவிக்கப்பட்டது. கேப்டன் பதவியிலிருந்து விலகுவதால் அவர் தனிப்பட்ட முறையில் தன்னுடைய பேட்டிங்கில் கவனம் செலுத்தலாம். அணியின் முடிவை எந்த சுயநலமும் இல்லாமல் உடனடியாக ஒத்துக்கொண்டார். இதற்கு ஒரு தைரியம் வேண்டும். தன்னை முன்னிலைப்படுத்தாமல் அணிக்காக அவர் இதனை ஒத்துக்கொண்டார்" என்றார்.

மேலும் "தொடர்ந்து கொல்கத்தா அணியை இந்தத் தொடரில் சிறப்பாக முன்னிலைப்படுத்த என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். இந்த தலைமைப் பொறுப்பு எனக்கு பிடித்திருக்கிறது" என்றார் இயான் மார்கன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com