டாஸ் வென்றது இங்கிலாந்து : பாகிஸ்தான் முதல் பேட்டிங்
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்றது.
உலகக் கோப்பை தொடரின் 6வது லீக் போட்டி இன்று இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையே நடைபெறுகிறது. ட்ரெண்ட் பிரிட்ச் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனால் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்கிறது. பாகிஸ்தான் அணி ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் படுதோல்வி அடைந்ததால் இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளனர்.
ஆனால் பலத்துடன் இருக்கும் இங்கிலாந்து அணி சொந்த மண் என்பதால் இந்தப் போட்டியை எளிதில் வெல்லலாம் என்ற நிலையில் உள்ளது. ஏற்கனவே அந்த அணி முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வெற்றி பெற்றுள்ளது. கடந்த போட்டியில் காயம் காரணமாக பங்கேற்காத மார்க் வுட் இந்தப்போட்டியில் இடம்பெற்றுள்ளார். இந்த முறையும் வேகப்பந்து வீச்சாளர் டாம் குரானுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.